ஒளி மயந்து கிடக்கிறது

● ஒளி மயந்து கிடக்கிறது ●
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
என்ன பரவசம்
என் உயிர்த் துடிப்பு எதையோ
தேடிப் பேசத் துடிக்கிறது
இத்தனை குதூகலத்தோடு
பூத்து நிற்கும் ரோஜாவே
உன் இதயத்துள் புகுந்து
அதிர்ந்து துடிக்கிறது சுவாசம்
என் முற்றம்
ஒளி மயந்து கிடக்கிறது
நன்றி கூற நான்
ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்
கொய்து உன் கூந்தல் சூட
மாட்டேன் நான்
அப்படியே. ...அப்படியே
காண விளைகின்ற
ஒரு கண்ணின் விம்பத்தை
கொண்டு வந்து உன்னை
முகர வைக்கிறேன். .
அது போதும். ..அது போதும்
எனக்கு. ...!
- பிரியத்தமிழ் -
14.02.2016

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (16-Feb-16, 6:26 am)
பார்வை : 118

மேலே