ஹைக்கூ சென்ரியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

எண்ணிலடங்காதவை
எண்ணம் கவர்ந்தவை
மலர்கள் !

மதித்து ரசிப்பவர்களுக்கு
மகிழ்வைப் போதிக்கும்
மலர்கள் !

கோபம் கொள்வதில்லை
ஊடல் கொள்வதில்லை
மலர்கள் !

வரவேற்கின்றன
வண்டுகளை
மலர்கள் !

தேன் உண்டால்
தேம்பி அழுவதில்லை
மலர்கள் !

கண் கொள்ளாக் காட்சி
கண் கவர் மாட்சி
மலர்கள் !

கர்வம் இல்லை
கொள்ளை அழகு
மலர்கள் !

இல்லவே இல்லை
போட்டி பொறாமை
மலர்கள் !

கூர்ந்துப் பார்த்தால்
எல்லாம் அழகு
மலர்கள் !

ரசித்துப் பார்த்தால்
அழகோ அழகு
எருக்கம் மலர்கள் !

பறக்காமல்
பட்டாம் பூச்சி
ஓ மலர் !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Feb-16, 7:22 pm)
பார்வை : 84

மேலே