ஹைக்கூ சென்ரியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

வருத்தத்தில் கதிரவன்
நிலவு கண்டு மலரும்
அல்லி !

வெளியே
தெரிவதில்லை
வேர்களின் கடின உழைப்பு !

உடன் இருந்தாலும்
ஒட்ட விடுவதில்லை நீரை
தாமரை இலை !

கொடியதும் உண்டு
மரங்களில்
கருவேல மரம் !

முக்கண் உண்டால்
இன்பம்
நுங்கு !

அவசியம்
களை எடுப்பு
விவசாயம் !

காக்கும் நீர்வளம்
தரும் நன்மைகள்
பனைமரம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Feb-16, 7:21 pm)
பார்வை : 100

மேலே