பிரம்ம லிபி

கம்பன் எழுதினான்
காளிதாசன் எழுதினான்
பாரதி எழுதினான் பாரதிதாசன் எழுதினான்
புரிந்து கொண்டேன் !
பிரம்மன் எழுதியிருக்கிறான் தலையில்
அறிவின் பக்கங்களைப்
புரட்டிப் புரட்டிப் பார்க்கிறேன்
புரியவில்லை !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Feb-16, 10:19 am)
பார்வை : 229

மேலே