என் வழியில் அமைதியாக

பாடம் படித்தேன் வரி பிறழாமல்
மனனம் செய்தேன் வரி பிசகாமல்
நெஞ்சில் இருத்தினேன் பண் மாறாமல்
நிறைத்தேன் மனதை இடம் விடாமல்
இவ்வாறாகப் படித்தேன் என் இளமையில்
யாவற்றையும் முழவதுமாக வல்லமையோடு
இன்று படிப்புக் கை கொடுக்க சிறப்போடு
வாழ்கிறேன் என் வழியில் அமைதியாக.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (27-Feb-16, 5:30 pm)
பார்வை : 376

மேலே