நடிப்பாய்…
நாட்டை யாழும் மன்னனென
நடையுடை பாவனை ஒப்பனையில்,
பாட்டும் நடிப்பும் ஓங்கிடவே
பலர்முன் கூத்தில் நடிப்பவனின்
வீட்டு ஏழ்மை நிலையினையே
வெளியே காட்ட முடிவதில்லை,
நாட்டில் பலரின் கதையிதுவே
நடிப்பாய்ப் போனது வாழ்வதுவே…!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
