விண்வெள்ளி

விண்வெள்ளி

வெண் வெள்ளியாய் விண்வெளியில்
வெண்ணில வொன்று கண்டேன்
கண் கரும்புள்ளியில் வெண்புள்ளியாய்
யாதுமறியாக் குழவியின் கண்களில்
மனதைக் குளிரவைக்கும் வண்ணமாய்
என்றும் அமைதியின் நிறமாய்
உயிர்த்தல் மறைதல் என்று
வாழ்வின் ஓர் தத்துவமாய்
பூவைச் சுற்றும் வண்டாய்
இப்பூவுலகைச் சற்றும் வெண்பந்தாய்
அறிஞனின் மூளையில் சிந்தனை
அறிவியல் கூறுகளின் முழுவுருவம்
அதுவே வெண்ணிலவோ என்று !

- செ.கிரி பாரதி

எழுதியவர் : செ.கிரி பாரதி (3-Mar-16, 6:31 pm)
பார்வை : 88

மேலே