கயலே உனக்கொரு கவிதை வேண்டுமா

வலையினில் சிக்கும் நதியோர நன்கயலே
வார்த்தையில் சிக்காத தேன்

நீரோடை துள்ளும் கயல்கள் மனவோடை
துள்ள வரும்கவி தை

விழியில் கயலாட நீரில் கயல்கள்
விழித்தது ஈதுயா தென்று

----கவின் சாரலன்
யாப்பார்வலர்கள் முயலுக

எழுதியவர் : கவின் சாரலன் (6-Mar-16, 10:45 am)
பார்வை : 117

மேலே