கயலே உனக்கொரு கவிதை வேண்டுமா
வலையினில் சிக்கும் நதியோர நன்கயலே
வார்த்தையில் சிக்காத தேன்
நீரோடை துள்ளும் கயல்கள் மனவோடை
துள்ள வரும்கவி தை
விழியில் கயலாட நீரில் கயல்கள்
விழித்தது ஈதுயா தென்று
----கவின் சாரலன்
யாப்பார்வலர்கள் முயலுக