நீயா நானா

பெண்மையை உள்ளடக்கிய
ஆண்மைதான் முழுதானது;
ஆண்மையை உள்ளடக்கித்தான்
பெண்மையும் முழுதாகிறது.

களையெடுக்க இயலா முரண்கள்
ஓராயிரத்திற்கு மேல்
ஆண்மையிடத்து மட்டுமல்ல
பெண்மையிடத்தும் தான்.

முரண்கள் அவை இயற்கைதான்;
களைய நினைத்தால் இன்னும்
ஆயிரமாய் கிளைக்குந்தான்.

இயல்பான முரண்பாடுகளை
உளமார புரிந்து கொண்டால்
உடன்பாடுகள் அன்றே முளைக்கும்,
இன்பம்அதிலே கிளைக்கும்.

உடன்பட்டு வாழும்
பெண்மையும் ஆண்மையும்
முழுமை பெறும்; இல்வாழ்க்கை
என்றும் நிறைவு தரும்.

எழுதியவர் : சுடரோன் (9-Mar-16, 8:51 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
Tanglish : neeyaa NANA
பார்வை : 75

மேலே