ஐ. ரமேஷ் பாபுஜி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஐ. ரமேஷ் பாபுஜி |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 173 |
புள்ளி | : 33 |
தமிழில் ஆர்வம் உடையவன். ஆரோக்கியத்திலும் ஆன்மிகத்திலும் கொஞ்சம் ஆர்வம் உண்டு.
கீதையைப் படித்துவிட்டேன்
பலனை எதிர்பார்க்காமல்
இருக்க முடியவில்லை;
புத்தமும் படித்துவிட்டேன்
கொள்ளும் ஆசையதனை
விலக்க முடியவில்லை;
பைபிளையும் படித்துவிட்டேன்
மறு கன்னத்தைக் காட்ட
இன்னும் இயலவில்லை;
குர்ஆனையும் படித்துவிட்டேன்
இரப்போர்க்கு எல்லாம்
ஈய முடியவில்லை...
என் பொல்லா மனமது
இறக்கும் வரைக்கும்
நான் கொடும்மனிதனே...!
!
வாளால் மாய்ந்தவர்களைவிட
நாவால் நோயிலும் சாவிலும்
வீழ்ந்து கொண்டிருப்போரின் இருப்போ
நகரங்களில் காற்றின் மாசுக்களைப் போல...!
நஞ்சேற்றி வீசிய வார்த்தைகளோ சாகாமல்
உடனிருப்போரை சாகடிக்கும்; பல சமயம்
அவ்வார்த்தைகள் வீசியவரையும்
வாழவிடாமல் மாளவைக்கும்.
நஞ்சோ நா வீசும் வார்த்தையில் மட்டுமல்ல
நா(ம்) விழுங்கும் நாகரிக உணவிலுந்தான்;
சேர்ந்தாரைக் கொல்லும் கொடியோரைப் போல
உடல் சேர்ந்து சாகடிக்கும் அவ்வுணவும்.
'அமிழ்தால் செய்த நஞ்சு' அக்கால சீதையெனில்
'சுவையால் செய்த நஞ்சு' இக்கால உணவு;
சேரவிடாதவரை தயை காட்டாது கொன்றது முதல் ரகம்
சேர்ந்தோரை சுவையூட்டி சாகடித்தல் இரண்டாவது ரகம்.
தீர்மானி...தேர்ந்தெடு...!
இரவும் பகலும் இயற்கை
உனக்கு அளித்தது.. மாறாதது.
ஆனால் உனது
இன்பமும் துன்பமும்...?
நீயே உனக்கு கொடுப்பது.
உன் மனமதில்
எண்ணங்கள்தான் உன்
இன்பமும் துன்பமும்.
எண்ணங்களை மாற்றினால்
எல்லாமே மாறிவிடும்.
தீர்மானி...தேர்ந்தெடு...!
உடலையும்உயிரையும்
வழங்கியது இயற்கை.
ஆனால் உனது ஆரோக்கியம்..?
உனது உணவில் தான்,
உணவாக உனக்குள்
நீ தள்ளுவது செய்வது
இரண்டுதான்-ஒன்று
ஆரோக்கியத்தைக் கொடுக்கும்
இல்லை கெடுக்கும்.
ஆம்...
உன் ஆரோக்கியம்
உனது நாவிலுந்தான்.
உணவை மாற்றினால்
உடலும் மாறிவிடும்.
தீர்மானி... தேர்ந்தெடு...!
கைகளையும் கால்களையும்
தந
பூரித்திருக்கிறது எம் உள்ளமெல்லாம்
ஆர்ப்பரித்து எழுந்துள்ள இளஞ்சிங்கங்களின்
அடங்கா நல் ஆற்றலைக் கண்டு!
செய்வதறியாமல் முடமாகிவிட்டனர்
சொல்வித்தை மட்டும் வைத்து நம்மை
கொள்ளையிட்ட பல பொல்லாத அரசியல்வாதிகள்!
எழுச்சிமிகு இளைஞர் உம் ஒற்றுமை
வளமிகு நம் தமிழகத்தை மீண்டு
எழச் செய்யும் மிக விரைவில்!
'பொன்னுக்கு தீ'யென பரவட்டும்
என்றுமிந்த பெருமைமிகு நம்
தொல் தமிழுணர்வு. அதில்
மண்ணெங்கும் தீய்ந்து ஒழியட்டும்
நமை முடக்கும் தீயனவெல்லாம்!
நம்பிக்கை பூத்துவிட்டது- இனி
நதிகளெல்லாம் வரம்புகளைத் தாண்டி
ஆர்த்தழுவும்; நமது மலட்டு மண்ணெல்லாம்
மீண்டும் பூப்படையும்!
'ஏற்றம்' கண்டு இயற்கை
தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...
விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....
நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...
அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?
உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?
தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...
வண
இரவைக் கூட பகலாய் மாற்றி
.....எடுத்துத் தருவேன் உன்கையில் - அந்த
சிரமத்தில்என் இதயம் அறுந்தால்
.....போட்டுக் கொள்வேன் ஒருதையல்
கோடை வெயிலும் குளிரும் உந்தன்
.....கண்கள் பொழியும் பார்வையிலே! - உன்
ஆடையோடு என்னைச் சேர்த்து
.....போர்த்திக் கொள்ளடி போர்வையிலே!
புரிந்து வாழ காதல் நமக்குள்
.....இருக்கும் வரையில் என்னபயம் - நம்மை
பிரிக்க நினைத்த எமனும் கூட
.....தோற்றுப் போனான் பலசமயம்
மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால்
.....மருந்தாய் எனக்கொரு முத்தமிடு - நான்
பிழைத்து வந்து மீண்டும் உனக்கு
.....திருப்பிக் கொடுக்க மிச்சம்விடு
ரத்தம் என்னுள் உறைந்தது உந்தன்
..
வலியைப் புரிந்து கொள்
வாழ்க்கைப் புலப்படும்;
வலியைக் கடந்து செல்
நல்லின்பம் உன் வசப்படும்.
வலியைக் கடந்து நின்ற
கல் தான் கடவுளாகிறது;
வலியை உணர்ந்த பின் தான்
பொன்னும் அவனுக்கு அணியாகிறது;
பிரிவின் வலியறிந்தப் பூக்கள்தான்
அவனை அலங்கரிக்கின்றன;
தீச்சுடும் வலியறிந்த திரி தான்
தீபமாகிறது ஆலயத்தில்.
ஆம்...
வலிபடும் பொருளெல்லாம் பிறர்
வழிபடும் பொருளாகின்றன.
வாலிபக் கன்றுகாள்!
வலி விலக்கப்பாராதீர்....நீங்கள்
மிதிபடுபொருளாகிவிடுவீர்.
வலியுணர்ந்து வலி கடந்து செல்லுங்கள்- பலர்
உங்கள் வழி தேடி வருவார்கள்...
உங்களின் புகழ் பாட வருவார்கள்.
புரிந்துகொள்ளுங்கள்...
வெற்றிக்கு
நண்பர்கள் (8)
![அர்ஷத்](https://eluthu.com/images/userthumbs/f2/qmgpf_29097.jpg)
அர்ஷத்
திருநெல்வேலி
![செல்வமணி](https://eluthu.com/images/userthumbs/f3/ptbfq_33225.jpg)
செல்வமணி
கோவை
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![தங்கமாரியப்பன்](https://eluthu.com/images/userthumbs/f1/nmpry_10206.jpg)
தங்கமாரியப்பன்
MADURAI
![பிரவின் ஜாக்](https://eluthu.com/images/userthumbs/a/lsabi_7107.jpg)