சண்டே என்கவுண்டர்

அது ஓர் இரவு வேளை. காக்கி சட்டையும் கையில் காகிதமுமாய் வந்து அங்கே இரவு பணி பார்த்துக் கொண்டிருந்த பரந்தாமனிடம் அந்தப் பேப்பரை நீட்டினான் அசோக். படித்தவன் உடனே கைப்பேசியை எடுத்து தன் உயரதிகாரியிடம் சார் அந்த இரண்டாவது பிளாக்கில் இருக்கும் அந்த மூனு செல்லும் தானே சார் என்று கேட்டார் சரி என்று கூறி வைத்தான். வேன் எல்லாம் ரெடிதானே என்றவனிடம் ஆங் எல்லாம் ரெடியா இருக்கு சார் என்றான். அவர்கள் அனைவரும் வண்டியில் ஏற்றப்பட்டனர். ஒருவர் வந்து பின்னால் பூட்டை இழுத்துப்பார்த்துவிட்டு ஓகே கிளம்பலாம் என்றார். புகையைக் கக்கி கொண்டு அந்த வேண் அந்த வளாகத்தை விட்டுச் சென்றது.

அந்த வேண் ஒரு கானகத்தின் வழியே சென்றது. முன்னால் மூவர் அமர்ந்திருக்க ஒருத்தன் மட்டும் திரும்பி அவர்களைப் பார்த்தான். மனதுக்குள் நினைத்துக்கொண்டான். பாவம் விடிந்தால் உங்கள் உயிர் உங்களுக்கு இல்லை. ம்ம்... என்ன பன்றது எங்கள் கடமையை நாங்கள் செய்ய வேண்டி இருக்கு என்று நினைத்துக்கொண்டான்.

உள்ளே இருந்த அனைவரும் தூக்க கலக்கத்திலும் மிரட்சியுடன் வேகமாகக் கடந்து செல்லும் மரங்களையும் மின்சார கம்பங்களையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிகாலை அந்த வேண் அங்கே நிறுத்தப்பட்டது. வேணின் வருகைக்காகக் காத்திருந்த அனைவரும் அங்கே வந்தனர்.

காதர்பாய் உங்களுக்கு 30 கூண்டு சாதிக் பாய்க்கு 27 கூண்டு அப்புறம் முத்துராஜிற்க்கு 34 கூண்டு என்று பில்லை பார்த்துப் படித்தான் வண்டி ஓட்டிக்கொண்டு வந்த டிரைவர்.

வேணின் சைடில் சோர்ந்து சொங்கி போய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கோழியின் கீழ் சுகுனா சிக்கன் யங்கர், டெண்டர், பெட்டர் என வாசகங்கள் மின்னொளி பட்டு பிரகாசித்தன.

எழுதியவர் : விஜயகுமார் (10-Mar-16, 5:49 pm)
சேர்த்தது : vejeicdm
பார்வை : 162

மேலே