மகிழ்ச்சியோடு

வீட்டு சண்டையை
விருந்தினர் வரும்போது
மறைப்பது!
மனைவின் சொல்லடியை
மாதாவிடம் மறைப்பது!
குழந்தைகள்
ஓங்கி உதைத்தன் வலியை
மகிழ்ச்சியோடு
மறைப்பது!
வாங்கிய கடனை
திருப்பாதவனின்
கண்களில்
பணத்தை மறைப்பது
இதெல்லாமோ
இந்த வார்த்தையில்
அடங்கியுள்ளது!
---- கே. அசோகன்.