நகைகடை உரிமையாளர்கள் யாருக்காக போராடுகிறார்கள்
நகைகடை உரிமையாளர்கள் யாருக்காக போராடுகிறார்கள்?
தங்களுக்காகவா? மக்களுக்காகவா?
யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம். ஆதங்கமும் படவேண்டாம். விஷேசம் வைச்சிருக்கோமேன்னு பதறவேண்டாம். விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொறுத்து கொள்ளுங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக. இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு இது எப்படி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால் மேலும் படியுங்கள் விவரம் புரியும்.
2 லட்சதுக்கு மேல் வாங்கினால் பான் கார்டு அவசியம்.
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை கலங்கடித்து உள்ளது. அது எப்படி எல்லாத்திலும் தான் வரி இருக்கு என்று நினைக்கலாம். இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம். நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போகிறார்கள் என்று நினைக்கிலாம்.
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவராவது போறாடுவார்களா?
யோசித்துப்பாருங்கள். விலை கிராம் ரூ.3000 விற்பனை செய்த போதும் மக்கள் நகை வாங்க தானே செய்தார்கள். இந்த 1% கூடுதல் வரியால் மக்கள் நகை வாங்குவதை விட்டா விடுவார்கள்.
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற.
மக்களுக்காகவா இவர்கள் இவ்வளவு ஆதங்கம் அடைகிறார்கள்?
போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் கிடையவே கிடையாது.
அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு?
எங்கே இவங்களுக்கு வலிக்குது?
அதான் கலால் வரி. அது என்ன பண்ணும் என்று நினைக்கிறீர்கள்
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி. அப்படி என்றால் ஓரு கடைகாரா் எவ்வளவு இறக்குமதி செய்கிறாரோ அதற்கு மட்டும் வரி, அந்த நகை கடைக்காரர் எவ்வளவு விற்பனை செய்கிறார் என்று மத்திய அரசுக்கு தெரியாது. அது மாநில அரசுக்கு தான் விற்பனை வரி (vat). அவர் எவ்வளவு விற்கிறாா் என்று, அந்த விற்பனைக்கு மட்டும் வரி கட்டி விடுவர் ஆனால் எவ்வளவு இறக்குமதி செய்கின்றனர் என்று மாநில அரசுக்கு தெரியாது.
.
இங்கே தான் இப்போது ஆப்பு
ஓரு நகை கடை காரர் 10 கிலோ நகை வாங்கினால் விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கணும் அல்லது சேதாரம் போக குறைவாக தானே இருக்க வேண்டும், ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ அல்லது15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு தெரிந்து விடும். எப்படி இறக்குமதி செய்தது 10 கிலோ விற்பனை செய்வது மட்டும் 15 கிலோவாக வரும் என்று ஆராய்ந்தால் இவர்களோட குட்டு வெளியே வந்திருங்கிற பதற்றம் தான் இவர்களுக்கு.
என்னது அது முதலாவதாக சேதாரத்தின் பின்னணி அடிப்படும் நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவர்கள் உங்கள் நகைக்கு உண்டான சேதாரத்தை தனியாக காட்ட மாட்டார்கள். உங்கள் நகையின் கிராமோடு கூட்டி தான் பில் போடுவார்கள்.
உதாரணமாக 10 கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து 10+1=11 கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு vat போட்டு வாங்கி விடுவர். மாநில அரசின் தேவையோ என்ன விற்பனை ஆகுதோ அதற்கு தான் வரி, அதனால் இதுநாள் வரைக்கும் நகைக் கடைக்காரர்களுக்கு பிரச்சனை இல்லை.
ஆனால் கலால் வரியால் என்னாகும் 11 கிராம் விற்பனை என்று பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவர்கள் நமக்கு கொடுத்தது 10 கிராம் மீதி 1 கிராம் அவர்களிடம் தான் இருக்கும். இப்பிடியே சேதாரத்தின் தங்கம் அவர்களிடம் சேர சேர அவர்கள் வாங்கியதிற்கும் விற்பனை செய்ததிற்கும் கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தால் அவர்கள் வாங்கியதை விட அதிகமாக இருக்கும். அப்போது அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க உரிமை உண்டு.
.
அடுத்து தங்க கடத்தல்:
இது தான் இப்ப இவர்களுக்கு பேரிடி. கறுப்புப் பணம் உருவாகுவதே இவர்களால் தான். அதற்கு உடைந்தயாக போவதும் இவர்கள் தான். அதுதான் இப்ப இவர்களுக்கு புளியைக் கரைக்கிறது.
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது. அப்ப கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது போக பிடிபாடமல் வருவது யார் கைக்கு வரும்? இந்த நாணயமான நகை கடைகாரர்களிடம் தான் வரும். அவர்கள் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை கொள்ளை லாபத்திற்க்கு விற்பனை செய்து விடுவர்.
இப்போது மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால் வரியால், ஓரு நகை கடை காரர் வாங்கியது எவ்வளவு? விற்றபனை செய்தது எவ்வளவு? என்று இப்பொழுது மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு வந்துவிடும். இந்த சூழலில் இவர்களால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது. சேதாரத்தில் மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது.
சேதார தங்கத்தை கூட வாடிக்கையாளர்களுக்கு தரும் நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரர்களுக்கு சேதார நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே மிகப்பெரிய அடி.
இப்பொழுது தெரிகிறதா ஏன் இவ்வளவு பெரிய போராட்டம் என்று?
எனவே யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம்!