மக்கள் எழுச்சி

தாத்தாவின் கைதடியில் இருந்து பேரனின் கை துப்பாக்கி வரை காசின் மை கரையும். இவற்றிற்கெல்லாம் நன்றி சொல்லி போவதற்கு நாங்கள் வேறு வேறு ஆகல அல்ல தொப்புள் கொடி மூலம் தொடர்கின்ற உறவு இது....விடுதலை தீவின் வியாபகதிட்காய் தொடர்ந்து உழைப்பது தான் உலகத்து தமிழர் கடன் அனால் இப்போ!! இருள் கவிண்டது போலிருக்கும் ஈழத்து நிலவரத்தால் அருள் சுரக்கும் உங்கள் பார்வையிலும் சில அசமந்தம் தெரிகின்றது.... சந்தேக சலசலப்புகளையும் குந்தக விளையாடுகளையும் கண்டு வந்தது வினை என்று வாழாதிருப்பது தெரிகின்றது...

ஐம்பது ஓவர்களில் பதினோரு பேராடி ஆளாளுக்கு அவுட் ஆக பத்துலட்சம் பேர் பார்த்து பொப்கோன் சாப்பிட்டு பம்பலடித்து போவதற்கு துடுப்பாட்ட போட்டியல்ல விடுதலை போரட்டம்... எல்லோரும் ஆட வேண்டும் எல்லோரும் போராட வேண்டும். நம்பிக்கை வில்லிலே முன்னோக்கி நான் பூட்டி தம்பிக்கு பின்னாலே எல்லோரும் வர வேண்டும். முல்லைதீவிலிருந்து முறோசியஸ் தீவு வரை, விசுவமடுவில்ருந்து விம்பிள்டன் வரை, நீர்வேலியில் இருந்து நியூ யார்க் வரை எங்கல்லாம் தமிழன் இருக்கின்றானோ அங்கெல்லாம் இருந்த படி அன்னை தமிழ் ஈழத்துக்காய் அர்ப்பணித்து போராட வேண்டும்....

ஈபில் டவரின் உயரத்துக்கு தெரியுமா தமிழர்களை யார் யாரெல்லாம் தாழ்தர்கள் என்று?, வெனிஸ் மிதவை நகருக்கு தெரியுமா தமிழர்களின் வாழ்வு என்னும் ஏன் கண்ணீரில் மிதக்கிறது என்று?, பைசா சாய் கோபுரத்துக்கு தெரியுமா தமிழர்களை யார் யாரெல்லாம் சாய்த்தார்கள் என்று?, அட இவ்வளவு ஏன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். நெப்போலியன். நெல்சொன் மண்டேலா போன்ற இவர்களை போற்றும் உலக சமுதாயத்திற்கு தெரியுமா பிரபாகரன் இடுப்பில் என்னும் ஏன் பிஸ்டல் இருக்கிறது என்று?....

என் பிரியதிட்குரிய புலன்பெயர் வாழ் சொந்தங்களே!!! புரட்சியின் வீச்செல்லைக்காய் புனிதப்பணி தொடருங்கள்.. தெரியாமல் இருபோரிட்கு தெரிவியுங்கள், எல்லாம் தெரிந்தும் தெரியாமல் நடிப்போரின் முகத்திரையை கிழியுங்கள்...! மக்கள் எழுச்சி முன்னால் இந்த மாபெரும் உலகம் கூட உள்ளங்கையில் உருண்டை.,,,

ஈராயிரம் ஆண்டு ஈழத்தமிழர் பெற்ற, வரம் வாராது வந்துதித்த வரலாற்றின் வலியகரம், போராடும் மனதோடு தேறும் மனம், வேராக தான் என்று வீழ்கின்ற வீரமணம் யாரால் அது அட யாரால் அது.....சின்னப்புஞ்சிரிப்பை செவ்விதழில் தவளவிட்டு சீறும் சிந்தையிலே விடுதலைக்காய் பணிமூட்டி என்னும் பணி தொடர்வேன் என இறுமாப்போடு இருக்கும் அண்ணன் பிரபாகரன் என்னும் அற்புதத்தின் அற்புதமே!!!!! அந்த கரிகாலன் எரி விழியை உற்று பாருங்கள் உங்கள் பணிக்கான கட்டளைகள் அவன் விழிக்குள்ளே தெரிகிறதா வேலையினை தொடருங்கள்...


பிரபஞ்ச தமிழர்களுகேல்லாம் பிரபாகரன் தான் தலைவன் அந்த பிரபாகரனிட்கு வலுச்சேர்க்க பிரபஞ்சம் எங்கும் தமிழர்கள் இது தான் புதிய சமன்பாடு போராடும் தேசமொன்றின் வீர உடன்பாடு...பூமியெல்லாம் வாழும் தமிழர்களின் தலையை நிமிர்த்தியது ஒரு சுட்டுவிரல் அது பிரபாகர பெருந்தகையின் பற்று விரல் சாதாரணமாக சுட்டும் விரலல்ல அது எதிர்க்க வரும் எவரையும் சுடும் விரல்.. அந்து பற்று விரல் தொட்டுவிடும் தூரத்தை எட்டிவிடும் எங்கள் அலை...

நம்புவோம் வெல்வோம் செயற்படுவோம்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்




முதல் பதிவு தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

எழுதியவர் : குருநாதன் சாருஜன் (19-Mar-16, 1:47 pm)
சேர்த்தது : BraveBoys Eelam
Tanglish : makkal ezuchi
பார்வை : 179

மேலே