கல்வித்தந்தை காமராஜர்

தமிழக மண்ணில் பிறந்தவரே
தன்னலம் துறந்து வாழ்ந்தவரே
தமிழகம் ஆண்ட தலைவர்களில்
தன்னிகர் இன்றித் திகழ்ந்தவரே

கல்வியும் அதிகம் கற்காமல்
கல்விக் கூடங்கள்பல திறந்தாய்
கல்லாத கிராமத்து சிறுவர்களும்
கல்வியைக் கற்றிட வழிசெய்தாய்

மதியத்தில் உணவிடும் திட்டத்தால்
மக்களின் மனதில் இடம்பிடித்தாய்
மாநிலம் முழுதும் உனைப்போற்ற
மாபெரும் தலைவர் என்றானாய்

நீதியும் நேர்மையும் உன்வழியே
நெருங்கவில்லை உன்னை ஒருபழியே
கடமையில் சிறிதும் தவறாமல்
கண்ணியம் காத்ததுன் தனிவழியே

எவருக்கும் அஞ்சாது ஆட்சிசெய்தாய்
ஏழ்மையில் உள்ளோரை ஆதரித்தாய்
அனைவரும் அனைத்தும் பெறச்செய்து
அன்னாந்து பார்த்திட உயர்ந்துநின்றாய்

முதல்வர் என்னும் சொல்லுக்கே
முன்னோடி என்றும் நீயானாய்
உன்னைப் போன்றொரு முதல்வரையே
என்நாடு காண்பதும் எந்நாளோ!

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (20-Mar-16, 4:33 pm)
பார்வை : 200

மேலே