செம்போத்து குருவி

எனக்குத் தோழன் குருவி
செம்போத்து குருவி ஒன்று வந்தது
என் வீட்டுச் சுவற்றில் அமர்ந்தது
என் கவனமதை ஈர்த்தது - என் பள்ளிப் பருவ
உண்ணும் வேளை நினைவில் வந்தது!
குருவிகள் எனக்குக் காட்டியே
என் அன்னை அமுது ஊட்டினாள்,
அதன் சின்னஞ்சிறு மூக்கும், கண்களும்
நாற்புறமும் பார்த்தன!
குருவிகள் ஒன்றிரண்டாய் அமர்ந்தன
கூர் மூக்கைத் தீட்டி கீச்.. கீச் ஒலி எழுப்பின
அங்குமிங்கும் பறந்தன ஆனந்தமாய்த் திரிந்தன
இங்கு எனக்குத் தோழனாயின!
செம்போத்துகள் தத்தித் தத்தி
மரக் கிளைகளில் அமர்ந்தன,
தட்டில் இருந்த சாதமும்
என் வயிற்றுக்குள்ளே மறைந்தது!