எகிப்தில் உள்ள பிரமிடு தமிழர் கட்டியது - Kovai Ganesh

.
எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது
---------------------------------------------------------------
பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !
ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள்வியப்பால் விழி விலகி நிற்பீர்கள்!
.
எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியதுஎன்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச்சொல்லாகும் .
கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக்கணக்கு ஆரம்பம்
கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகியமாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள்.இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு 'என்று அழைக்கப் பட்டது .

சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில்புதைத்து மேலே மேடு அமைப்பர் .
அது "சிறுஇடு " .மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால்"பெரும்இடு" அமைப்பர் . பெரும் + இடு =பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று
எகிப்தில்அழைக்கப் படுகிறது .
தமிழர்கள் உலகின் பல பாகங்களில்வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல . பலமொழிகள் தோற்றத்திற்கு காரணமாய்அமைந்து, பல மொழிகளுக்கும் பலசொற்களை கொடையாகவும் அளித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க உலகின் தொல்நாகரீகமே தமிழர்களுடையது தாமிரபரணிஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர்இதற்கு சான்று.
இது ஓர் இடுகாடு.இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன்பரப்பளவு 114 ஏக்கர்.........
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில்தமிழனின் கைவினைக் கலைகளைக்காணலாம்.
அண்மையில் எகிப்தில் கிடைத்ததமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன்,கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல்பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கேகொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணிசெய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம்மகாதேவன்குறிப்பிட்டுள்ளார்.
பிரமிடுகள்கட்டப் பயன்படுத்திய கற்களைசெதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன்பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும்.தமிழனின் இரும்பு நாகரிகத்தைவெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
=========================

எழுதியவர் : Kovai Ganesh முகநூல் (4-Apr-16, 6:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 126

மேலே