தீர்ப்பு

அவசரமாகக் கிளம்பிக் கொண்டு இருந்த நீதிபதி கணேசனை, மகனுடைய அலறல் 'டென்ஷன்'படுத்தியது. தன் அக்காவின் கையிலிருந்த பொம்மை தான் வேண்டும் எனறு அடம் பிடித்து அழுது கொண்டு இருந்தான் அவன்.

"தம்பிக்கு அந்தப் பொம்மையைக் கொடுத்துத் தொலைச்சா தான் என்ன?"
என்று தம் பெண்ணின் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார் அவர்.

"அந்தப் பொம்மை ஒடைஞ்சிருக்குப்பா! ஆணி, தம்பி கையைக் கிழிச்சுடும்னு தான் கொடுக்கலே. அதைப் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க. பரவாயில்ல...கோர்ட்டிலேயும் இது மாதிரி என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாராவது நல்லவருக்குத் தண்டனை கொடுத்திடாதீங்க!" என்று விசும்பினாள் அவள்.

தம் பெண் முன் குற்றவாளியாகத் தலைகுனிந்து நின்றார் நீதிபதி கணேசன்!

ஞா. கலையரசி

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு ஊஞ்சல்) (5-Apr-16, 11:20 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : theerppu
பார்வை : 241

மேலே