ஏகாந்தம்

ஏகாந்தம் எனில்
ஒரு சக்தி
எங்கும் ஒளி
யாவும் அமைதி
பரவலான ஆனந்தம்
பேரானந்தம்
ஒரு நிர்ச்சலனாமான
பேருவகை .


கண்டேன் அச்சுகத்தை
ஒரு நாள் யானும்
என் குழந்தைகள் மட்டும்
கொஞ்சவில்லை பேசவில்லை
நோக்கினேன் அவர்களை
நேரம் அறியா வண்ணம்
அடைந்தேன் பேருவகை
ஏகாந்தம் அதுவே.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (8-Apr-16, 8:23 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : yeekaantham
பார்வை : 701

மேலே