ஏகாந்தம்
ஏகாந்தம் எனில்
ஒரு சக்தி
எங்கும் ஒளி
யாவும் அமைதி
பரவலான ஆனந்தம்
பேரானந்தம்
ஒரு நிர்ச்சலனாமான
பேருவகை .
கண்டேன் அச்சுகத்தை
ஒரு நாள் யானும்
என் குழந்தைகள் மட்டும்
கொஞ்சவில்லை பேசவில்லை
நோக்கினேன் அவர்களை
நேரம் அறியா வண்ணம்
அடைந்தேன் பேருவகை
ஏகாந்தம் அதுவே.