அப்பாவின் ஆஸ்தி

அமரராகிவிட்டார் அப்பா ஆனால் இன்றும்
அகலவில்லை எங்களை விட்டு !
அவர் ஆஸ்தி அத்துடன் ஆஸ்துமா என்னிடம்
அவர் முட்டைமுழி முகச்சாயல் என் மகனிடம்

அவர் அறிவு அகச்சாயல் ஆணவப் பேத்தியிடம்
அவர் அழியா பிம்பம் மட்டும் என் அம்மாவிடம்!
அப்பாவி என்னப்பா! அவரை பாவி மனுஷா
அநியாயாமா எனை அம்போன்னு விட்டாயென

அவர் நினைவை கண்ணீரால் நனைக்காமல்
அனுதினமும் அம்மா உலர்ந்ததேதில்லை !
அவர் எங்கே போனார் எங்களை விட்டு?
அவர் அணுக்கள் எங்களிடம் உள்ள போது!

எழுதியவர் : முரளிதரன் (12-Apr-16, 8:56 am)
பார்வை : 103

மேலே