அடிதடிகளில் இது மாதிரி...


இமைகளால் படபடத்து
இதயச் சிறகொடிப்பது...

பார்வையால்
கவர்ந்திழுத்து
பரிதவிக்கப்
பார்த்துச் சிரிப்பது ...

விரல் நகங்களால்
உடல் வருடி
பல நிறங்களில்
உதடு தடவி

அப்போதைக்கப்போது
அருகழைப்பது

சில
நிஜங்களைச்
செல்லப் பொய்யுரைப்பது

காத்திருந்து
பூக் கொடுத்து
காரியம் முடிந்தவுடன்
கழற்றி விடுவது..

நேற்று நீ
இன்று நான்

உன்னிடம் ஏமாந்த
என்னை
யாரிடமோ ஏமாற்றிப்
பூரித்தது...

நரிக் கூட்டமாய்
நாய்கள் ஆனது

ஆண் பெண்
என்ற பேதமெல்லாம்
என்றோ போனது

இது ஒரு வித
புது மோசடி
அடிதடிகளில்
இது புது மாதிரி...


எழுதியவர் : அன்புபாலா (19-Jun-11, 1:00 am)
சேர்த்தது : anbubala
பார்வை : 267

மேலே