காவிரி தீர்த்தம்


எச்சில் பிச்சை இட்டாய்
மேகக் காட்டில்
இடி உடுக்கடித்து
மின்னல் பேய் பிடித்து
மரப் பிராணத்தை
எச்சில் பிச்சை இட்டாய்

எல்லை வரையறுத்து
ரத்தக் குழாய் அடைத்து
தேசத்தின் சுவாச
மூச்சைப் பிடித்து

இனமென்றும்
எனதென்றும்

கட்டிப் பையடைத்து
கடைமடை அடைத்து

அடப் படுபாவிகளா
இப்படியா
மழை நனைத்தது

காவிரித் தீர்த்தம் என்றோ
கங்கை புனிதம் என்றோ
எனக்கும் உனக்கும்
மட்டும் தான்
சொந்தமென்றோ

நீ தான்
எப்போதும்
பேய் பிடித்து...

எழுதியவர் : அன்புபாலா (19-Jun-11, 1:17 am)
சேர்த்தது : anbubala
பார்வை : 262

மேலே