பார்வை ஒன்றே போதுமே

முற்றுப் பெறாது இந்தக் காதல்
மூழ்கி விடாது இந்தக் காதல்
இற்றுப் போகாது இந்தக் காதல்
சற்றெனைப் பார்த்து பார்வைக்கணை வீசு

போதைச் சிரிப்பு இதற்கு வேண்டாம்
பொய்க் கவிதைகள் எதுவும் வேண்டாம்
காதல் கடிதமும் எழுத வேண்டாம்
தோதாய் பார்த்திடு அதுவே போதும்

கேளிப் பேச்சுக்கள் தூரப் போடு
ஒட்டு உரசல்கள் ஆறப் போடு
ஆழிப் பேரலை போல என்னை
மூழ்க வைத்திடும் பார்வை பாரு

உந்தன் குரலுக்கு ஈடு இல்லை
உந்தன் அழகுக்கு யாரும் இல்லை
உந்தன் தோட்டத்தில் பூத்த முல்லை
உந்தன் பார்வைக்கு முன்னே வீணே

உன் பார்வைக்கு விழுந்தவன் நானேதானோ
உன் பார்வையின் கைதியும் ஆனேன்தானோ
உன் பார்வையை மட்டுமே பார்த்திருப்பேன்
உன் பார்வைக்காய் உன்வழி பூத்திருப்பேன்

உனைப் பார்த்திடத்தானோ நான் பிறந்தேன்
உன் பார்வைக்குதானோ நான் விழுந்தேன்
உன் தீக்குச்சி பார்வையே மூச்செனக்கு
அதில் எரிந்திடும் விமோச்சனம் தாவெனக்கு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 11:43 am)
பார்வை : 8377

மேலே