2400உன் புன்னகை என்மீது போர்தொடுக்குதடி 555

என்னுயிரே...
நீயும் நானும் கரம்கோர்க்க
ஆண்டுகள் சில இருக்கு...
உன்னை காணாத
அந்த நாட்களில்...
ஏனோ இறந்துதான்
பிறக்கிறேன் நான்...
நாம் சந்திக்காத அந்த நாள்
என்னை ஏனோ கொல்லுதடி...
ஏனென்று தெரியாமலே நானா
சிரிக்கிறேன் அழுகிறேன்...
நான் தனிமையில்
இருக்கும்போது...
உன் புன்னகை என்மீது
போர் தொடுக்குதடி...
நமக்குள் இடைவெளி
வரும் நாளில்...
அன்று நான் ஜீவனற்று
இருப்பேனடி மண்ணில்.....