10 செகண்ட் கதைகள் - என்ன பிரச்னை
"சொல்லுங்க...என்ன பிரச்னை?"
" டாக்டர், யார் எதை சொன்னாலும் அதுக்கு எதிரா செய்யணும்னே தோணுது டாக்டர்"
"குட். போய் ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிட்டு வாங்க"
"இல்லை..சார்.. நான் போகமாட்டேன்"
"குட்.ஒன்னும் பிராப்ளமில்லை .குணப்படுத்திடலாம்"
வந்தவன் தன் கால்சட்டைப் பையிலிருந்து மெதுவாக தன் கைத்துப்பாக்கியை எடுத்தான்....
ஹேய்.....ஹேய்.......மிஸ்டர்......
"என்னை சுட்டுடாதே" இதுதான் கடைசியாக டாக்டர் சொன்ன சொல்!
(அறிவுஜீவி சுஜாதா ஞாபகார்த்தமாக.)