வானமே எல்லை கவிஞர் இரா இரவி

வானமே எல்லை ! கவிஞர் இரா .இரவி !
எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும்
இனிய செயலும் மிக உயர்வாக மாறும் !
இலட்சியம் பெரிதினும் பெரிதாக இருக்கட்டும்
இலட்சியதிற்கான பயணம் தொடரட்டும் !
தெரியாது நடக்காது முடியாது விட்டுவிடுக !
தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடுக !
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்திடுக
தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும் !
ஆம்சுட்ராங் முடியாது என்று நினைத்திருந்தால்
அவரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது !
எடிசன் முடியாது என்று ஒதுங்கி இருந்தால்
இன்றும் மின்சாரம் உலகில் இருந்திருக்காது !
வாசுகோடகாமா பயணிக்காமல் திரும்பி இருந்தால்
வழியை இந்தியாவிற்கு கண்டு இருக்க முடியாது !
காந்தியடிகள் நடக்காது என்று நினைத்திருந்தால்
கண்களால் விடுதலையைப் பார்த்திருக்க முடியாது !
தந்தை பெரியார் முடியாது என்று சோர்ந்திருந்தால்
தமிழ்நாட்டில் சமுகநீதி மலர்ந்திருக்க முடியாது !
.
அறிஞர் அண்ணா இயலாது என்று நினைத்திருந்தால்
அடுக்குமொழியால் அனைவரையும் கவர்ந்திருக்க முடியாது !
மாமனிதர் அப்துல் கலாம் சோர்ந்து இருந்தால்
மாணவர்களிடையே தன்னம்பிக்கை விதைத்திருக்க முடியாது !
தயக்கம் முன்னேற்றத்தின் தடைக்கற்கள் அறிந்திடுக
தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதற்படி தெரிந்திடுக !
வானமே எல்லையாகக் கொள் காரணம்
வானத்திற்கு எல்லையே இல்லை புரிந்திடுக !