இரவினில் ஒளிரும் நட்பின் உலகம் 555

நட்பு...

இதய உணர்வுகளோடு
மெதுவாய் உறவாடி...

தென்றல் என்னும்
அலைகளில் தவழ்ந்து...

அருகில் அமர்ந்து மலரிதழ்களின்
மயக்கத்தில் உருவாகி...

பாடி பறக்கும் வண்டுனத்தை
பக்கத்தில் கவர்ந்திழுத்து...

நந்தவனத்தின் சுகந்தம்
மலர்களின் மகிமை...

எதற்கும் விலைபேசும் இவ்வுலகில்
விலையில்லா உணர்வளித்து...

சோக நெஞ்சங்களை
சொந்தமாக வயபடுத்தி...

காலங்காலமாய் பூவுலகில்
கண்ட இன்பம்...

நட்பு என்னும்
இனிய இன்பம்...

இரவினில் நிலவில்லாமல்
ஒளிரும் நட்பு உலகம்...

நட்பை உயிராக நேசிப்பவர்கள்
நிச்சயம் உலகை ரசிப்பார்கள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Apr-16, 8:34 pm)
பார்வை : 437

மேலே