10 செகண்ட் கதைகள் - ஊனம்

பிரதோஷ அபிஷேகம் பார்த்துவிட்டு கோவில் வாசலுக்கு வந்த சீதாவின் கண்ணில் அந்த நொண்டி பிச்சைக்காரன் தென்பட்டான். மிகவும் பாவமாக இருந்தது அவளுக்கு. சும்மா காசு கொடுக்காமல் ஏதாவது பயனுள்ளதாக செய்யவேண்டும் என்று நினைத்தாள். ஒரு வாரத்திற்குள் அவளுக்கு தெரிந்த நண்பர்களிடம் உதவி பெற்று ஒரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து, 'இனி பிச்சை எடுக்காமல் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்' என்றாள்! அந்த பிச்சைக்காரன் 'எத்தனை பேர் இப்படி என் பிழைப்பை கெடுக்க வராங்க பாரு' என்று பக்கத்தில் இருந்தவனிடம் அலுத்து கொண்டு, 'இந்த வண்டியை விற்க ஆள் பாரு' என்றான்.

எழுதியவர் : கலாவதி பாஸ்கரன் (3-May-16, 1:03 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 137

மேலே