உணவு

உன் மேல் பலருக்குக் காதல்
உன்னுடன் சிலருக்கு மோதல்!!

உனை அறிந்தோருக்கு நீ கிடைப்பதில்லை
கிடைப்போருக்கு உன் அருமை புரிவதில்லை!!

கண்ணால்க் கண்டும் பலருக்கு
உனைத் தொடும் பாக்கியமில்லை...
உனை கண்களால் காணக்
கூட சிலருக்கு பாக்கியமில்லை!!

உனைத் தூர வீசும் கைகள்
இல்லா வயிற்றின் சாபங்களையும்
உலகின் கொடியப் பாவங்களையும்
பிணவறைக்கு அள்ளிச் செல்லும்!!

உன்னுள் நன்மையும் தீமையும்
சேர்ந்தே கிடக்கும்...
அதை
அறிந்தவன் சுகமாய் வாழ்வான்
அறியாதவன் வாழ்வின்றி மடிவான்!!

உனை உயிர்த்தவனை
மறந்தவன் மூடன்...
மதிப்பவன் மனிதன்!!

இன்றும் என்றும் என்றென்றும்
உன்னால் வாழ்வேனே நான்

--- உணவே.....

எழுதியவர் : ரசிகா (5-May-16, 7:04 pm)
Tanglish : unavu
பார்வை : 110

மேலே