நீ தேடும் நான்
உன்னிடம்
நான் சிரித்திராத
ஒரு பொழுதினை எண்ணி
நீ கோபம் கொள்கிறாய்..
சிரித்திருக்கிலாம்
என்று சிலாகித்துக் கொள்கிறாய்..
சிரிக்கவில்லைதானே
என வருத்தமுறுகிறாய்..
சிரிக்கதாது ஏன்
என சந்தேகம் கொள்கிறாய்..
சிரிக்க கற்றுக்கொள்ள சொல்கிறாய்..
சிரிப்பது நல்லதென்கிறாய்..
சிரிக்கவே வாழ்கிறோம் என்கிறாய்..
சிரிக்க வேண்டும் என்
கட்டளை இடுகிறாய்..
சிரிக்கத்தான் செய்கிறேன்,
நீ இல்லாத ஒரு பொழுதில்..
இவைகளை எண்ணி..!!