நாற்காலி
![](https://eluthu.com/images/loading.gif)
யாருக்காகவோ
காத்திருக்கிறது
நாற்காலி.
எவரும் அமரா
அதன் இடைக்கால
வெற்றிடம்
நேற்று வரை
தன் மேல்
அமர்ந்து
சென்றவரகள்
ஞாபகங்களைப்
பருகியபடி
நாளை அமர்ந்து
கொள்பவர்
வருகைக்காய்
நம்பிக்கையோடு
தயார் படுத்திக்
கொள்கிறது
நடக்கமுடியாத
தன் நான்கு
கால்களை.