தோல் சட்டை
தாழ்ந்து நான் பார்த்த வானம்
தானே விழுங்கிய நீலம்
சேர்ந்து நான் பார்த்த
தருணம் தேனை முழுங்கிய வண்டும்
நரைத்து நான் பார்த்த
முடியும் என்னை
உணவாக்கிய வயதும்
மறைந்து நான் பார்த்த
பறவையும் என்னை
மனிதனாக்கிய நடையும்
கடந்து வெகுதூரம்
சென்றாலும்
ஓடாமல்
நடந்து செல்ல
கூறுகின்றன
மானிடராய்
-மனக்கவிஞன்