ஆவலைத் தூண்டும் நாவல்

அழகு நிறைந்த பூச்சரமே
உன்னைக் கண்டால் என்னிதயம்
ஓர் மத்தளம் ஆகுமே!

ஏழு வண்ணம் கொண்டவளே
எனக்காக பிறந்த வானவில்லே
உன் செவ்வாய் சிந்தியது மெய்யோ?
கடைக்கண் காட்டியது பொய்யோ?

புன்னகைப் பூ பூத்து
என்னை நீ சிரிக்க வைத்து
வளர்பிறையாய் என்னுள் வளர்ந்தவளே

மெளனமாய் பூத்து நீ
எனக்காக காத்திருக்கும் அழகே
என் நெடு நாள் ஆசையை
தீர்க்க வந்த சொப்பணமே
உன்னால் என் கண்கள்
பூத்துதான் போனதடி அற்புதமே

உன்னை படிக்காத நாளில்லை
என் ஆவலைத் தூண்டிய நாவலே
மீண்டும் ஒரு முறை
உன்னை புரட்டிப்பார்க்க விரும்புகிறேன்

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 1:03 pm)
பார்வை : 67

மேலே