உள்ளமும் வெள்ளமும்

இரும்பை ஈர்க்கும்
காந்தம்தான்
உன் கண் எனினும்
என் காதலை ஏற்காத
இரும்பாய் இருப்பதேன்
உன் உள்ளம்?

இருண்ட கண்டம்தான்
உன் இதயம் என்ற போதும்
காதல் மழை
பொழிய வில்லையென்றால்
ஏது நதியில் வெள்ளம்?

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 1:44 pm)
பார்வை : 122

மேலே