கவை

நானும் அவனும் ஒன்றாய் வாழ்ந்தோம்
யார் கண்பட்டதோ
இரு வேறு துருவங்களாய் நிற்கிறோம்

ஒரே ஊன்றுகோலாய் வாழ்ந்தோம்
இன்றும் ஒரேகோல் தான் ஆனால்
இரு வேறு திசை பார்த்து போகும் பறவைகளாகி
கவையாய் நிற்கின்றோம்
எங்கள் அவையை யார் கலைத்தது?

கவை
எனை சிரச்சேதம் செய்ய வந்ததோ
இல்லை ஈட்டி போல்
மார்பில் குத்தி சாய்க்க வந்ததோ
என் செந்நீரில் நனைந்த பிறகாவது இந்த கவை
ஒன்று சேருமோ
மண்ணில் ஓர் உயிர்
ஈர் உடலாய் நின்று வாழுமோ
இல்லை என்உயிரில்
இந்த உடல் வீழ்ந்து சாகுமோ
என் உயிர் எனை பிரிந்து வாடுமோ?

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-May-16, 5:00 pm)
பார்வை : 115

மேலே