பேசாத அல்லது முரண் - கஇளஞ்சேரனின் கவிதை
03.04.2013 தேதியிட்ட ’ஆனந்த விகடன்’ ’நானே கேள்வி... நானே பதில்!’ பகுதியில் வெளியான க.இளஞ்சேரனின் ஒரு அருமையான கவிதை.
கவிதைத் தலைப்பு: ‘பேசாத அல்லது முரண்'
'பேச்சு வரணும்னு
பேச்சியம்மன வேண்டிக்கிட்டு...
டாக்டரம்மா குடுத்த
மருந்தையும் ஊட்டிவிட்டு...
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி
‘என்னடி சொன்னாங்க
ஸ்கூல்ல’ன்னு
நான் கேட்க...
‘பேசாத’ன்னு
சொன்னாங்கம்மான்னு
சொன்னா என் மக!'