பேசாத அல்லது முரண் - கஇளஞ்சேரனின் கவிதை

03.04.2013 தேதியிட்ட ’ஆனந்த விகடன்’ ’நானே கேள்வி... நானே பதில்!’ பகுதியில் வெளியான க.இளஞ்சேரனின் ஒரு அருமையான கவிதை.

கவிதைத் தலைப்பு: ‘பேசாத அல்லது முரண்'

'பேச்சு வரணும்னு
பேச்சியம்மன வேண்டிக்கிட்டு...
டாக்டரம்மா குடுத்த

மருந்தையும் ஊட்டிவிட்டு...
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி

‘என்னடி சொன்னாங்க
ஸ்கூல்ல’ன்னு
நான் கேட்க...

‘பேசாத’ன்னு
சொன்னாங்கம்மான்னு
சொன்னா என் மக!'

எழுதியவர் : க.இளஞ்சேரன் (29-May-16, 8:11 pm)
பார்வை : 169

மேலே