தவம் கிடப்பேன் உனக்காய்

தலையணை அணைத்து,..
உன் புகைப்படத்தோடு
முகம் பொருத்தி
பேசிடும் கதையெல்லாம்,
நாணத்தில் - இரு
கன்னம் சிவக்க
உன் மார்போடு
முகம் புதைத்து
முணுமுணுத்திட ஆசை..!
பக்கம் வந்து - என்
மடி சாய போவது
எப்போது அன்பே..?
உன் நெற்றி தொடும்
முடிகோத - என்
விரல்கள் விரதம் கிடக்குதடா..
உன் மீசை முடி
பற்றி இழுத்து - ஆசை
முத்தம் கோரிட
என் உதடுகளும்
உண்ணாவிரதம் நடத்துதடா...
நீ செல்போன் வழி
கேட்டிட்ட - கோடி
முத்தங்கள் வேண்டாமா??..
கடனாக முத்தங்கள் தந்து
வட்டியோடு வசூலிக்க
வரப் போகிறாய்
என்றவனே.. - இன்னும்
தரிசனம் தரவில்லை.....
எக்கச்சக்கமாய் கடனேறி
சுமையோடு காத்திருக்கிறேன்,
மீட்டுவிட வா அன்பே...
அதுவரை..,
உன் புகைப்படத்தில்
முகம் புதைத்து - நானும்
தவம் கிடக்கிறேன்...!

எழுதியவர் : ‪கவிப் பிரியை - shah‬ (29-May-16, 8:42 pm)
பார்வை : 2133

மேலே