வெப்பத்தில் வாடிக் கருகிய பூக்கள்

பூவும் பூவையும் என்றும்
ஒன்றெனச் சொல்வர் – மல்லிகைப்
பூவைப் பரிசாய் அளித்தாள் சகோதரி
பாசத்தையும் பெட்டியில் வைத்து!

வாங்கிய நானும்
பத்திரமாக காரின் முன்பக்கக்
கண்ணாடியின் பின்னே வைத்தேன்,
நண்பருடன் பேச்சு சுவாரசியம்!

வெயிலின் வெப்பம் மறந்தேன்...!
இரண்டு மணி நேரம் கழிந்தது,
காரை எடுக்க விரைந்தேன் - கண்டேன்
வெப்பத்தில் வாடிக் கருகிய பூக்கள்!

...எதிரே கண்ணாடியில்...
..........எச்சரிக்கை.........
மலரும் மனைவியும் ஒன்று!
மென்மையாக கையாள்வது நன்று!

“Flower is like wife,
Handle with care”

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-16, 9:35 pm)
பார்வை : 846

மேலே