எல்லையில்லை
சிரிக்கும் சிரிப்பிற்கு எல்லையில்லை
பெருகும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை
நல்லதை மட்டுமே நினைத்துவாழ்ந்தால்
வாழும் வரைக்கும் தொல்லையில்லை
இயற்கை அழகிற்கு எல்லையில்லை
உலகின் வளத்திற்கு எல்லையில்லை
மனிதன் அவற்றினை பாதுகாத்தால்
வருகின்ற சந்ததிக்கு தொல்லையில்லை
அன்பினை காட்டிட எல்லையில்லை
ஆதரவு கொடுத்திட எல்லையில்லை
கொடுமைகள் செய்வோர் திருந்திவந்தால்
மக்களுக்கு என்றுமே தொல்லையில்லை
கவிஞன் கற்பனைக்கு எல்லையில்லை
பிறக்கும் கவிதைகளுக்கும் எல்லையில்லை
இவற்றினை வழிநடத்தும் நல்லோரிருந்தால்
மொழியின்பால் மயங்கியோருக்கு தொல்லையில்லை
தலைவர்கள் அதிகாரம் எல்லையில்லை
அதனாலவர் அகங்காரம் எல்லையில்லை
தன்னிலை உணர்ந்தேஅவர் நன்மைசெய்தால்
வாழவைக்கும் நாட்டிற்கு தொல்லையில்லை