நாணும் தழிழ்

நான் தமிழன் என்பதால்
நாணும் பெண்ணானேன்

ஆங்கிலம் பேசும் ஆண்களிடம் மட்டுமல்ல
செம்மொழி அறியா பெண்மளிடமும்....

என்னைக் கண்டால் வியந்துதான் பார்க்கிறது
பேதை (போதை) மட நெஞ்சம்!

கன்னி பெண்ணைக் கண்டு
கவிதை சொல் வடிக்கும் ஆண்கள்
காதலி அழகில் மயங்கும் கண்கள்
திருமணம் என்றவுடன்
மணக்க எனை யோசிக்கிறார்கள்
சிறு வரதட்சணை ஏதுமின்றி...

தாயையும் தமிழையும்
அசிங்கப்படுத்தும் ஆண்கள்
ஆங்கிலக் காதலியோடு மட்டும்
கைகோர்த்து திரிகின்றார்கள்...

தனக்கொரு அடிமை சிக்கிக்கொண்டதாய்
காதலி புகழ்பாடும் முரண்பாடு ஏன்?

உணமையாய் நேசிப்பவனுக்குதான் தெரியும்
உலக அதிசயத்தில் ஒன்று செந்தமிழ் என்று!

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Jun-16, 1:41 pm)
பார்வை : 305

மேலே