கல்வி முதலியன செல்வங்கட்குக் காரணமாம்

நல்வினைப்பி னல்லால் நறுந்தா மரையாளும்
செல்லாள் சிறந்தார்பி னுயினும்-நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொழுது மில்.


( பதவுரை )
சிறந்தார் பின் ஆயினும்-தன்னை நேசிப்பவர்களிடத்திலாயினும்,
நல்வினைப் பின் அல்லால்-நல்வினை காரணமாக அதன்பின் செல்வாளே யல்லாமல், நறும் தாமரையாளும்-நல்ல தாமரை மலரில் வாசஞ்செய்கின்ற திருமகளும்,
செல்லாள்-செல்லாள்,
நல்லவினை-அந்நல்வினை,
ஓத்தும் ஒழுக்கமும் தானமும்
உள்வழி-கல்வி ஒழுக்கம் தானம் இம்மூன்றும் உள்ளவிடத்து, ஒருபொழுதும் நீத்தல் இல்-எக்காலத்தும் நீங்குதல் இல்லை.

(குறிப்பு)
நறுந்தாமரை-அழகின் நலமிக்க செந்தாமரை,
ஓத்து-ஓதப்படும் கல்வி, காரணப்பெயர். வழி ஏழனுருபு. தானம்-பிறர்க்குதவி செய்தலாகிய தருமம். )

எழுதியவர் : (13-Jun-16, 1:44 pm)
பார்வை : 44

மேலே