இசை!

இருள் வழியில்
ஒளி சேர்த்து
தனிமைக்கு
துணை நிற்கின்றாய்!

மலரிதழின்
மென்மையுடன்
மனதின் வலிகள்
கரைக்கின்றாய்!!

தாயற்ற
சேய்க்கும்
தாலாட்டாய்
தலை வருடுகிறாய்!

இன்ப வெளியில்
துன்பம்
தொலைக்க
தூண்டுகிறாய்!!

மொழியெலாம்
கடந்து
மனிதம் மொத்தம்
ஈர்க்கிறாய்!

இனிக்கின்ற
இயல்புடன்
உயிர்ப்போடு
உலவுகிறாய்
உலகெங்கும்!!...

எழுதியவர் : தேன்கவி (13-Jun-16, 8:10 pm)
சேர்த்தது : Thenkavi_527
பார்வை : 46

மேலே