கட்டித் தங்கம் நாங்களே

துள்ளித் துள்ளிப் பாடுவோம்
புள்ளி மானாய் ஓடுவோம்
பள்ளிக் கூடம் விட்டதும்
கள்ளிக் காட்டில் சுற்றுவோம் !

கொட்டும் மழையில் மூவரும்
சட்டை யின்றி ஆடுவோம்
சுட்டிப் பிள்ளை யாயினும்
கட்டித் தங்கம் நாங்களே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jun-16, 11:20 pm)
பார்வை : 259

மேலே