கனிரசம் பாகம் -3

நான் அருகில் வரும்போதெல்லாம்
கண்களை இருக்க மூடிக்கொண்டு....
உடல் குழைந்து... முருகா !!!!! முருகா!!!!!
முருகா !!!!...... என்கிறாய் - கள்ளி
அப்படியென்னதான் பயம் உன்னுள்
என்னிடம்தான் கொஞ்சம் சொல்லேன் !!!!!!!!!!!!!!!!!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பக்கத்து வீட்டு மழலையிடம்
தேவதை கதை கூறிக்கொண்டு இருந்தேன்
சற்றே இடைமறித்து - தேவதை - னா எப்படி
இருப்பாங்க அண்ணா என்றாள்.....
ம்ம்ம்ம் - ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப
அன்பா , பாசமா இருப்பாங்க குட்டி என்றேன்..
உடனே அக்குழந்தை .. அப்போ இவங்க தேவதை தானே
அண்ணா என உன்னை கை காட்டியது !!!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (20-Jun-16, 2:56 pm)
பார்வை : 81

மேலே