என் இனிய உறவுகளுக்கு

என் இனிய உறவுகளுக்கு . . .
இறைவன் அருளால் யாவும் இருந்தும்
குறைகளை மட்டுமே
குறையாய் சொல்லி
நிறைகளை கோட்டை விடும்
என் போன்றவர்களே இங்கு அதிகம்
நம்மாள் இயன்றவற்றை கூட
செய்யாமல் போனதையும்
யாரும் ஒப்பு கொள்வதில்லை
நான் உட்பட
ஊனத்தை காட்டி
யாசகம் கேட்பர்களுக்கு மத்தியில்
ஊனத்திலும் தன் தன்மானம் குறையாமல்
புத்தகமோ
உணவு பொருளோ
எழுது பொருளோ
மற்ற அன்றாட தேவைகளையோ
விற்கும் பார்வையற்றவர்களிடமும்
ஊனமுற்றவர்களிடமும்
எத்தனை பேர்
பொருளை வாங்குகிறோம்
கடவுள் கைவிட்டாலும்
தன்னை சுற்றி இருப்பவர்கள்
கைவிடமாட்டார்கள் என்று
தன்னம்பிக்கையுடன்
வரும் இவர்களுக்கு
வாழ்வாதாரம் கொடுத்தோமா
தன் பக்கத்தில்,
தெரு முனையில்,
நம்மை நம்பி வாழும்
சிறு கடைகாரர்களையும்
அவர்களின் வாழ்க்கையையும்
அழித்து
பெரிய ஷோருமில் வாங்கி
மகிழ்வதைதான் உயர்வு என்று
நினைப்பதை கூட
குற்றம் என்று ஒப்புகொள்ளவில்லை யாரும்
நாட்டு மருந்து கடைகளை விட
நோய்க்கு தீர்வு என
ஆங்கில மருந்தகங்களிலே
அதிகமாய் தஞ்சம் அடைகிறோம்
விளம்பரப் படுத்தப்படும்
பொருட்களின் தரத்தை
அறிய கூட விருப்பமில்லாமல்
ஆடம்பரம் என்று
வாங்கி மகிழ்கிறோம்
விளம்பர செலவும் நம்மிடமே
வசூலிக்க படுகிறது என்பதை
தெரிந்தும் தெரியாமலும்
இந்திய விற்பனையை
நிர்வாணமாய் நிற்க விட்டு
ஆன்லைனில்
அன்னிய வணிகத்திற்கு
ஆடை போர்த்தி மகிழ்பவர்கள்
இங்கே எத்தனை பேர்
சிக்னலில் பிச்சை எடுப்பவர்களுக்கு
மத்தியில்
சிவப்பு விளக்கே
தங்கள் வாழ்வின்
பச்சை விளக்கு என்று
ஏக்கத்தோடு
சிறு பொருட்களை விற்பவர்களிடம்
வேண்டாம் என்று சொல்வது கூட
வெட்கம் என்று
தலையை திருப்பி கொள்கிறவர்கள்
எத்தனை பேர்
என் இனிய உறவுகளுக்கு
இனியேனும் நம்மை நம்பி
வாழ்க்கையை ஓட்டும்
இவர்களை நினைத்து பெருமை கொள்வோம்
அல்லது
குறைந்த பட்சம்
திரும்பியாவது பார்ப்போம்
ஆதங்கத்துடன்
ந.சத்யா