என்னவளே

கனவில் வரும் தேவதையே !

என் கண்ணில்
குடிக்கொள்ளும்
உன் பிம்பம்
நிஜமா நிழலா
தெரியவில்லை !

ஆனால்................

கண்கள் மூடினால் - உன்
விழிகள் மின்னொளியாய்
வீசுகிறது !

நிதமும் இரவில்
என் தூக்கத்தை
சூறையாடி
உன் பிம்பத்தை
எதிரொளிக்கிறாய் !

சொப்பனக்குமாரியே !

நாளும் உன்
நினைவில் மூழ்கி
தத்தளிக்கிறேன்..............

தத்தளக்கும் என்னை
காப்பாற்ற நிஜத்தில்
ஒருமுறை வாராயோ !

கனவில் வலம்வரும்
உன்னை என்னவளாக
உன் கைப்பிடிக்க
ஒருமுறை நேரில்
வாராயோ!

எழுதியவர் : புகழ்விழி (27-Jun-16, 10:28 pm)
Tanglish : ennavale
பார்வை : 106

மேலே