அழகிய தமிழ் மகள்

தமிழுக்கு மகளா இவள்
இல்லை அழகிய தமிழ் மகளா?
முத்தமிழில் எந்த தமிழ் இவள் என்றே இலக்கண இலக்கியங்கள் ஐயம்
கொள்ளும்.....
இரு இதழ்கள் ஆயிரம்
அர்த்தங்கள் சொல்லும்
திருக்குறளா...
நாலடி அவள் நடக்கையில்
நாலடியார் இவளா....
ஐந்து விரல்கள் இவள்
அசைத்து பேசும் போது
ஐம்பெரும் காப்பியங்கள்
எதற்கு என்றே தோன்றுகிறது.....
நியாத்தை தட்டிக் கேட்கையில்
இக்கால கண்ணகி இவள் தானா.....
அவள் இரு கண்கள் ஒளி
குன்றாத சிந்தாமணியா.....
அவள் விடுக்கும் ஒவ்வொரு
வார்த்தையும் ஒருவரிக் கவிதையா...
இயற்கையின் பகல் இரவை
தன்னுள் கொண்டிருக்கும்
பேரதிசயம் அவளா....
இராமாயண சீதையின்
மறு பிறவி இவளா....
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில்
ஒரு மந்திரம் அவள் பெயரா...
இவள் மொழியும்
தமிழுக்கு
செந்தமிழ் அந்தஸ்து...
இவள் காட்டும்
வழிதனில் சொர்க்கத்தின்
திறப்பு வாயில்..
இவள் இரண்டு
கொலுசுகள் தான் உலகின் மிக சிறந்த
இசையமைப்பாளரா... தனியாக பேசுகையில் தனித்தமிழ் நீ ....
எல்லாவற்றையும்
தன்னில் அடக்கிய உலகம்
வியக்கும் அழகிய தமிழ் மகள் இவள் .......

எழுதியவர் : கிரிஜா.தி (6-Jul-16, 2:33 pm)
பார்வை : 475

மேலே