அநியாயம்••••
உண்ணக் கேட்டாள்
அது ஞாயம் !
உடுத்தக் கேட்டாள்
அதுவும் ஞாயம் !
செலவுக்குக் கேட்டாள்
அது கூட ஞாயம் தான் !
என்னையேக் கேட்டாள்
அது ஞாயமா ?
அநியாயமாய்க் கொடுத்தேன் எதை என்கின்றீரா ?
விருந்தும் மருந்தும்
மூன்று வேளை என்பார்கள் !
அதை காலங்காலமாய்
கொடுக்க இருந்தேன் !
அவள் என்னோடு மட்டும்
கேட்டதோடு நிறுத்திக்
கொண்டிருந்திருந்தால் !