அநியாயம்••••

உண்ணக் கேட்டாள்
அது ஞாயம் !

உடுத்தக் கேட்டாள்
அதுவும் ஞாயம் !

செலவுக்குக் கேட்டாள்
அது கூட ஞாயம் தான் !

என்னையேக் கேட்டாள்
அது ஞாயமா ?

அநியாயமாய்க் கொடுத்தேன் எதை என்கின்றீரா ?

விருந்தும் மருந்தும்
மூன்று வேளை என்பார்கள் !

அதை காலங்காலமாய்
கொடுக்க இருந்தேன் !

அவள் என்னோடு மட்டும்
கேட்டதோடு நிறுத்திக்
கொண்டிருந்திருந்தால் !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (9-Jul-16, 11:05 pm)
பார்வை : 119

மேலே