நண்பேன்டா-சிறுகதை

ஒரு முன்ணணி கட்சியில் இருவருமே இருந்தார்கள். போஸ்டர் ஒட்டுவதில் இருந்து, மேடை அமைப்பது வரை எல்லா வேலைகளையும் சேர்ந்தே செய்வார்கள். எல்லாருமே ஆச்சர்யப்பட்டனர்
ஒருவன் வேலு, மற்றொருவன் தாமு. எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே இருப்பார்கள். இணை பிரியமாட்டார்கள்.
அப்படிப்பட்ட இருவர்களில் ஒருவர்… இப்பொழுது.?
தாமு, எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகவும் ஆகி விட்டார். யாருமே எதிர்பார்க்கவில்லை. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு நிருபர் “ஸார், உங்க பிரண்ட் வேலுதானே “உங்களுக்கு பி.ஏ-ன்னு கேட்டார்….
அவர்; இல்லேப்பா, வேறொருத்தரை ஏற்பாடு பண்ணியாச்சுப்பா என்றார் அமைச்சர் தாமூ. எல்லாருக்கும் அதிர்ச்சி.
பத்திரிகையாளர்; கூட்டம் முடிந்து, எல்லோரும் கலைந்து போனவுடன், அந்த நிருபர்; மட்டும் ஒதுங்கி இருந்து “ஸார், ஒங்க பிரண்டு வேலுவை வெட்டிவிட காரணம் தெரிஞ்சுக்கலாமா?” ன்னு கேட்டார்..
“அவன் எப்பொழுதும் நண்பனாக இருக்கவே அசைப்படுகிறேன்” என்றார்; அமைச்சர் தாமு, அந்த பதில் வேலுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. நண்பன் தம்மை மறக்கவில்லை என்று உச்சிகுளிர்ந்து நண்பேன்டா என கட்டியணைத்தான் வேலு, அமைச்சர் தாமுவை!
ஆனால், பதில் சரியில்லையே என்று மனதிற்குள் முனகியவாறே, ஒரு நமுட்டு சிரிப்போடு, பத்திரிகை அலுவலகத்திற்கு புறப்பட்டார் நிருபர். அமைச்சரின் அளவளாவிய அன்பைப் பற்றி எழுத….!?.நண்பேன்டாநண்பேன்டாநண்பேன்டா

இனிய கவிதை உலா

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (14-Jul-16, 5:33 am)
பார்வை : 194

புதிய படைப்புகள்

மேலே