குழந்தையின் சிரிப்பு

முத்து சிரிப்பு

முக்கால் வாசி மனிதன்
மறந்து போன ஒன்றை
அளவு இல்லாமல்
வைத்திருக்கிறது குழந்தை

இன்று வரை கவிஞன் யாரும்
உன்தன் முத்து சிரிப்பை
பார்க்கவில்லையோ இன்னும்
எழுதப்படவில்லை அத்தியாயம்

கண்கள் இரண்டும் உந்தன்
முத்து சிரிப்பில் களவாட பட்டுவிடுமோ
என்ற பயத்தில் தானே கண்களை
இருக்க மூடி சிரிக்கின்றாய்

ஓடு ஓடு ஒளிந்து கொள்
பணம் வருகிறது ஓடி
தப்பித்துக்கொள் மாட்டிவிட்டால்
நீயும் துளைத்து விடுவாய்

கருவறையை கிழிக்கையில்
வலிமரந்து சிறித்தாள் அன்னை
உன்னை சிரிக்க வைக்க
அழகு மழலையே

சிரித்துகொண்டே இரு
சின்ன சின்ன சேட்டைகள்
செய்து அழகாக சிரித்திடு
தினமும் நாங்கள் மறுபிறப்பு எடுக்கிறோம்

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (22-Jul-16, 1:50 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
பார்வை : 5121

மேலே